ராஜபாளையம், பிப்.9: ராஜபாளையம் அருகே மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஈஸ்வரன்(45). எலெக்ட்ரீசியன். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்து மின் மோட்டாரை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.